இதையடுத்து, பெண்களை அனுப்பும் ஒரு நபர் போல போலீசார் அந்த கூட்டத்தை அனுகினார். அதன்பின், பிலிம் சிட்டி அருகே உள்ள கட்டிடத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சாவ்தான் இந்தியா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மற்றும் மராத்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ஒரு நடிகை ஆகியோர் சிக்கினர்.
மேலும், அவர்களை வைத்து விபச்சாரம் செய்து வந்து கும்பலையும் போலீசார் கைது செய்தனர். ஆனால், அந்த கும்பலின் தலைவன் தப்பிவிட்டான்.
மும்பையில் உள்ள பெரும்புள்ளிகளுக்கு, இணையதளம் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி, அவர்கள் விபச்சாரம் செய்து வந்துள்ளனர். ஒரு இரவுக்கு ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சம் வரை பணம் வசூலித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.