தண்டவாளத்தில் மயங்கி விழுந்தப் பெண்ணைக் காப்பாற்றாமல் போட்டோ எடுத்த இளைஞர்கள்

வியாழன், 9 ஏப்ரல் 2015 (14:06 IST)
கேரளாவில் தண்டவாளத்தில் மயங்கி விழுந்த பெண்ணை காப்பாற்றுவதற்குப் பதிலாக அங்கிருந்த இளைஞர்கள் ரயிலில் அந்தப் பெண் அடிபடுவதை போட்டோ எடுத்துள்ளனர்.



 



கேரள மாநிலம் கோட்டயம் அருகே முட்டம்பலம் என்ற பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் திடீரென மயங்கி தண்டவாளத்திலேயே விழுந்துவிட்டார்.
 
இந்நிலையில், இதைப் பார்த்த இளைஞர்கள் அந்தப் பெண்ணை காப்பாற்றுவதற்குப் பதிலாக, தங்களது செல்போனை எடுத்து, அந்தப் பெண் மீது ரயில் போதும் கொடூர காட்சியை படம்பிடித்துள்ளனர்.
 
உயிரைக் காப்பாற்றுவதைவிட கொடூரமாக அடிபட்டு உயிர் போவதை ரசித்து போட்டோ எடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்