ஆனால் ரயில் நிலையம் சென்ற அவன், ரயிலின் மேற்கூரையில் ஏறி செல்பி எடுக்க முயன்ற போது, 25,000 வோல்ட் மின்சாரம் பாயும் மின்கம்பியை எதிர்பாரா விதமாக தொட்டதால் தூக்கி விசப்பட்டான். உடலில் 80 சதவிகிதம், தீக்காயத்தால் பாதிக்கப்பட்டான்.
சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி யாரேனும் இருக்கிறார்களா என்று மும்பை காவல்துறை விசாரித்து வருகிறார்கள். மேலும் சிறுவன் வைத்திருந்த செல்போனை போலிசார் தேடிவருகிறார்கள். செல்பி எடுக்கும் போதுதான் அவன் தூக்கி விசப்பட்டதால், அந்த செல்போன் கிடைத்தால் போலிசாருக்கு இன்னும் சில தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.