இரண்டு நாள் சரிவுக்கு பின் இன்று ஏற்றத்தில் சென்செக்ஸ்

வியாழன், 26 மே 2022 (09:23 IST)
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் கடந்த இரண்டு நாட்களாக சரிவில் இருந்த நிலையில் இன்று ஓரளவு ஏற்றம் கண்டுள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது
 
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக சரிவுதான் அதிகமாக இருந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் இன்று பங்கு சந்தை சற்றுமுன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்சஸ் 240 புள்ளிகள் அதிகரித்து 54 ஆயிரம் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 60 புள்ளிகள் வரை உயர்ந்தது 16 ஆயிரத்து 80 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பங்குச்சந்தை படிப்படியாக மீண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ள நிலையில் இன்று பங்கு சந்தை ஏற்றம் கண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்