இரண்டாவது நாளாக தொடர்ந்து உயரும் சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் நிம்மதி!

புதன், 18 மே 2022 (09:52 IST)
கடந்த சில் நாட்களாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் நேற்று சென்செக்ஸ் 1300க்கும் அதிக புள்ளிகள் உயர்ந்தது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது
 
இந்த நிலையில் இன்று சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்த நிலையில்  54750 என்ற விலையில் சென்செக்ஸ் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 130 புள்ளிகள் உயர்ந்து 16390 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சென்செக்ஸ் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்