மக்களவை தேர்தலுக்கான கடைசி கட்ட தேர்தல் பிரசாரம் இன்று நிறைவு.. தலைவர்கள் சுறுசுறுப்பு..!

Siva

வியாழன், 30 மே 2024 (07:58 IST)
இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இன்று கடைசி கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறுவதை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் சுறுசுறுப்பாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது என்பது அதில் தான் தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெற்றது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் அடுத்தடுத்த கட்டங்களில் தேர்தல் நடைபெற்ற நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி ஏழாம் கட்ட தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது.

இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற உள்ளதை அடுத்து பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் சுறுசுறுப்பாக பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் ஒன்றாம் தேதி இறுதி கட்ட தேர்தல் நடைபெற்ற முடிந்தவுடன் ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பதும் அன்று இரவே அடுத்த ஆட்சி அமைப்பது யார் என்பது கிட்டத்தட்ட தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்