இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், அதில் கூறியிருப்பதவது " மத உணர்வுகளை அவமதிக்கும் வகையிலும், மதக் கலவரத்தை தூண்டும் வகையிலும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை இரும்புக்கரம் கொண்டு தடுக்குமாறு மத்திய அரசுகேட்டுக்கொண்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பசு இறைச்சி வைத்திருந்தா இஸ்லாமியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்பொழுது நாடு முழுவதும் கண்டனப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், பல மாநிலங்களில் மதக் கலவரங்கள் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது