அப்துல் கலாம் மறைந்து ஒரு வருடம் ஆன நிலையில் அவருக்கு நினைவு மண்டபம் இன்னமும் அமைக்கப்படவில்லை எனவும், அதற்கான நிலத்தை தமிழக அரசு வழங்க தாமதம் செய்து வருவதாகவும் மத்திய அரசு கூறுவதாக மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் தெரிக் ஓ பிரைன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், தமிழக அரசிடம் அப்துல் கலாமுக்கு நினைவு மண்டபம் அமைக்க 5 ஏக்கர் நிலம் கேட்டதாகவும், ஆனால் 1.83 ஏக்கர் நிலம் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் தெரிவிவித்தார். கூடுதல் நிலத்திற்கு காத்திருக்காமல் வரும் 27-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.