காதலியைப் பார்க்க வந்த இளைஞர் அடித்துக் கொலை....

வியாழன், 9 மார்ச் 2023 (22:09 IST)
கேரள மாநிலம் திருச்சூரில் தன் காதலியைப் பார்க்க வந்த இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுனர் சாஹர். . இவர் கடந்த மாதம் 18 ஆம் தேதி தன் காதலியைச் சந்திக்க வேண்டியோ, சரக்கூல் திருவாணிக்காவு கோவில் அருகே வந்தார்.

அப்போது, இவரைப் பார்த்த கும்பல் சாஹரை சரமாரியாகத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த சாஹருக்கு உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த  நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த  காவல்துறை, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், இளைஞரை அடித்துக் கொன்ற 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்