குழந்தையைப் பார்க்க மருத்துவமனைக்கு வரும் கூட்டம் அதிகரித்து வருவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் திணறி வருகின்றனர். பிறப்பு குறைபாடு காரணமாக குழந்தை இவ்வாறு இருப்பதாக மருத்துவர்கள் கூறிய போதும், இக்குழந்தையின் குடும்பத்தினர் அதை கடவுளின் அவதாரமாகவே பார்க்கின்றனர்.
இது குறித்து அக்கிராமவாசி ஒருவர் கூறுகையில், 'நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் குழந்தை பிறந்திருப்பதாக செய்தி வந்தவுடன் முதலில் நாங்கள் சந்தேகப்பட்டோம். ஆனால் நேரில் பார்த்தபோது அந்த குழந்தையைக் கண்டு அதிசயித்துப்போனோம்' என்று கூறினார்.