பெற்ற தாயை மனைவியுடன் சேரந்து எரித்துக் கொன்ற மகன் !

செவ்வாய், 3 நவம்பர் 2020 (23:13 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஷாஜகான் பூர் மாவட்டத்தில் உள்ள ஜலால் பூர் நகரில் வசித்து வந்த ரத்ன குமார் என்ற பெண்(58) சமீபத்தில் பலத்தை தீக் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் மரண வாக்கு மூலம் கொடுத்த பின் உயிரிழந்தார். அவர் கொடுத்துள்ள மரண வாக்குமூலத்தில், தனது வீட்டை விற்கும்படி மகன் வற்புறுத்தியதாகவும், ஆனால் தான் எல்லாருக்கும் சமமாகப் பிரித்துத்த தரச் சொன்னதை ஏற்காமல் , சொத்து தகராறில் தனது மகன், மருமகள் மற்றொரு உறவினர் சேர்ந்து தனக்கு தீ வைத்ததாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளிடன் விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்