துணையைக் கொன்றதற்காக....7 முறை இளைஞரை தீண்டிய பாம்பு....

செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (21:02 IST)
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் ஸ்வார் தெஹ்சில் மிர்சாபூர் என்ற பகுதியில் ஒரு விவசாய பண்ணை செயல்பட்டு வருகிறது.

இங்கு பாணியாற்று வருபவர் பப்லு. சில நாட்களுக்கு முன் இவர் தோட்டத்தில் ஒரு பகுதியில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, இரு பாம்புகள் பிணைந்து சண்டைப் போட்டுக்கொண்டிருந்தன.

இதில், ஆண்பாம்பை பப்லு கொன்றுவிட்டார். பின், பெண் பாம்பு தப்பிவிட்டது. பின்னர், பப்லு வீட்டில் இருக்கும்போது  அந்தப் பெண் பாம்பு வந்து அவரை தீண்டியது.

அருகில் உள்ளவர்கள் பப்லுவை மீட்டு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், அந்தப் பாம்பு 7 முறை கடித்துள்ளதாக தெரிவித்தார். இதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர், அந்தப் பாம்பு பழிவாங்கும் நோக்கத்தில் அவரைக் கடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்