தூய்மைப் பணியாளருக்கு மாலையிட்டு மலர் தூவிய மக்கள்

வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (22:29 IST)
பஞ்சாப் மாநிலத்தில் பொதுமக்கள் தூய்மைப்பணியாளார் ஒருவருக்குமாலை போட்டு மலர் தூவும்  வீடியோ ஒன்று வைரல் ஆகிவருகிறது.

கொரோனா நோய்த் தொற்று வருவதற்கு முன் தூய்மைப் பணியாளர்களுக்கு இருந்த மனநிலை தற்போது மாறியுள்ளது. தமது உயிரைப் பொருட்படுத்தாமல், மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், பல மாநிலங்களில் தூய்மைப் பணியாளர்கள் மீது அன்பும் பாசமும் அதிகரித்து வருகிறது. அதில், இன்று பஞ்சாப்பில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து நுழைந்த ஒரு தூய்மை தொழிலாளியை மக்கள் மாலையிட்டு மரியாதை செலுத்தினர். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்