பயங்கரவாதி ஒருவன் விஸ்வபாரதி விரைவு ரயிலில் பயணிப்பதாக, மத்திய புலனாய்வு துறை புர்த்வான் காவலர்களுக்கு தகவல் தெரிவித்தது. இதனையடுத்து ரயில்வே காவலர்களுடன் இணைந்து அவர்கள் புர்த்வான் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த அந்த ரயிலை சோதனையிட்டனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட முசுருதீன், மேற்கு வங்க மாநிலம் மிர்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் திருப்பூரில் 6 ஆண்டுகள் தங்கி, அங்கு அவர் மளிகை கடை நடத்திக் கொண்டிருந்தார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடமிருந்து 6 சிம் கார்டுகள் மற்றும் 2 போலி வாக்காளர் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவர் திருப்பூரில், ஐ.எஸ் அமைப்பு ஆள் சேர்க்கும் வேலையில் தீவீரமாக ஈடுபட்டிருந்தார். எனவே அவரது சகோதர் , அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளிடம் நுண்ணறிவுப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.