இந்த கொடூர சம்பவத்திற்கு பின்னர், பாகிஸ்தானை மீது இந்தியா பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை உடனடியாக ரத்து செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த 786 பேர் இந்தியாவிலிருந்து வெளியேறியுள்ளனர். இவர்களில் பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய 55 அதிகாரிகளும் உள்ளடங்குவார்கள். மேலும் அருணாசலப் பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய 5 மாநிலங்களில் ஒரு பாகிஸ்தானியர்கள் கூட இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலளிப்பதாக பாகிஸ்தானும் இந்தியர்களை தனது நாட்டிலிருந்து வெளியேற்ற தொடங்கியுள்ளது. இதுவரை 1,465 இந்தியர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களில் 25 பேர் இந்திய தூதரக அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.