கடந்த 2004- 2007ஆம் ஆண்டில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் சுமார் 700 க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பெற்று சன் டி.வி.க்கு சட்டத்திற்கு புறமாக பயன்படுத்தினார் என்று சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்த வந்தபோது, தயாநிதி மாறன் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகததால் விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
இந்த நிலையில், விசாரணையின் போது சிபிஐ தரப்பில் முதலாவது பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தயாநிதி மாறன் தவறு செய்தார் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. மேலும், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வருகிறார். எனவே, அவரை கைது செய்து விசாரிக்க வேண்டியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.