ஆம், பெங்களூரில் பெண் ஒருவரிடம் ஸ்விக்கி டெலிவரி பாய் உணவை கொடுத்துவிட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து அந்த பெண் தனது பேஸ்புக பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
ஸ்விக்கி டெலிவரி பாய் என்னிடம் ஏதோ கூறினான். அது எனக்கு புரியவில்லை. எனவே, நான் மீண்டும் என்ன என்று கேட்டபோது, என்னிடம் அவன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டான்.
இது போன்ற அசம்பாவித சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட ஸ்விக்கி நிறுவனம், சிறிது நேரத்தில் நடந்த சம்பவத்துக்கு இழப்பீடாக ரூ.200 கூப்பன் ஒன்றை அனுப்பியது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என குறிப்பிட்டுள்ளார்.