இது குறித்து அகில இந்திய வித்யார்த்தி பிரசாத் உறுப்பினர்கள் கல்லூரி முதல்வரிடம் புகார் மனு அளித்துள்ளனர். மேலும், அந்த மாணவன் அடையாளம் தெரியாதவர்களால் தாக்கபட்டு உள்ளார். உடனடியாக அந்த மாணவர் மருத்துவமனையில் சேர்க்கபட்டுள்ளார்.
இது குறித்து கல்லூரி நிர்வாகம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பி உள்ளது. மேலும், விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதன் முதல் கட்ட நடவடிக்கையாக 5 மாணவர்கள் மற்றும் ஒரு மாணவியையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உள்ளனர்.