உத்தரபிரதேசத்தில் மாணவனை கண்டித்ததால் பள்ளி ஆசிரியர் ஒருவரை அந்த மாணவனின் தந்தை அடித்து, உதைத்து, துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியரை சரமாரியாக அடித்து, உதைத்ததோடு அதனை தடுக்க வந்த அனைவரையும் தாக்கினர். கூட்டம் அதிகமானதால் திடீரென அவர்கள் கொண்டு வந்த நாட்டு துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடியுள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.