பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார் பிரபல இந்தி நடிகை சோனம் கபூர்

ஞாயிறு, 1 மார்ச் 2015 (10:33 IST)
பிரபல இந்தி நடிகை சோனம்கபூர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படுள்ளார், அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.


 



 
பிரபல இந்தி நடிகை சோனம்கபூர், இவர் சல்மான்கானுடன் 'பிரேம் ரத்தன் தான் பயோ' என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் நடந்து வருகிறது.
 
சோனம் கபூர் இந்த படத்தில் நடிப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் இருந்து ராஜ்கோட் வந்தார். அப்போது, அவர் காய்ச்சல், தொடர் இருமல், மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டார்.
 
எனவே அவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ராஜ்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சோனம் கபூர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
 
அங்கு அவருக்கு, ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது. அந்தப் பரிசோதனையில் அவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்