இந்த நிலையில் நேற்று மாலை ஜனாதிபதி மாளிகை அருகே, ஒரு குட்டி விமானம் போல் ஒன்று வானில் பறந்தது கொண்டிருந்ததை ஒரு பத்திரிகையாளர்கள் பார்த்துள்ளார். பார்ப்பதற்கு, பொம்மை விமானம் போல் காணப்பட்டது. அதை வெளிநாட்டுக்காரர் ஒருவர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கிக் கொண்டு இருந்தார். அது 20 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தது.
அவர் தப்பிச் சென்ற காரின் எண்ணை வைத்து போலிசார் விசாரணை செய்தபோது அந்த எண் ரஷிய தூதரகத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்தது என தெரிய வந்தது. பறக்கும் கருவியில் வெளிநாட்டுக்காரர் வீடியோ காமிரா பொருத்தி போட்டோக்கள், வீடியோ எடுத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.