முஸ்லீம்களுக்கு சிறப்பு சலுகைகள் வேண்டுமென்றால் அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லட்டும் என்று சிவசேனாவின் அதிகாரபூர்வ ஏடான சாம்னாவில் வெளியான தலையகத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த நாட்டில் முஸ்லீம்களுக்கு ஏதாவது வேண்டும் என்றால் அவர்கள் முதலில் இந்தியாவை தங்கள் தாய்நாடாக ஏற்றுக்கொண்டு வந்தே மாதரம் என முழக்கமிட வேண்டும் என்று தலையகம் கூறியுள்ளது.
கடந்த ஞாயிற்று கிழமை நாக்பூரில் நடந்த கூட்டத்தில் பேசிய மஜ்லேஷ் கட்சி தலைவர் அஷாவுதீன் மகாராஷ்ராவில் மாராட்டிய இனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது போல முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையிலேயே சாம்னாவில் இது போன்று ஒரு தலையகங்கம் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.