இரண்டு நாள் சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த சென்செக்ஸ்!

வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (09:43 IST)
கடந்த மாதம் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்செக்ஸ் சரிந்ததால்  முதலீட்டாளர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. 
 
இந்த நிலையில் இன்று மீண்டும் சுமார் 50 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்ததை அடுத்து 59065 என  சென்செக்ஸ் வர்த்தகமாகி வருகிறது என்பதும் இன்னும் ஒரு சில நாட்களில் மீண்டும் 60 ஆயிரத்தை தொட்டு விடும் என்றும் எத்ர்பார்க்கப்படுகிறது.
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 18 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 17654 என வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சென்செக்ஸ் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்