மோடி அரசின் 100 நாள் செயல்பாடு குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, சேதுசமுத்திர திட்டத்தை செயல்படுத்துவதற்காக ராமர் பாலத்தை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் சாலை போக்குவரத்து, தேசிய நெடுஞ்சாலை துறைகளில் புரட்சிகர மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கச் செய்வதில் போக்குவரத்து, கப்பல் துறைகளின் பங்களிப்பு, குறைந்த பட்சம் 2% இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.