மருத்துவமனைக்குள் செல்ல முயன்ற மத்திய அமைச்சரை தடுத்து நிறுத்திய பாதுகாவலர்!

செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (17:04 IST)
மருத்துவமனைக்குள் ஆய்வுக்காக சென்ற மத்திய அமைச்சரவை பாதுகாப்பாளர் தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மத்திய அமைச்சர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்ட்வியா ஆய்வு செய்யச் சென்றபோது அந்த மருத்துவமனையின் பாதுகாவலர் அவரை அடையாளம் தெரியாததால் தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது 
 
டெல்லியில் உள்ள சப்தர்ஜங் அரசு மருத்துவமனைக்கு மாண்ட்வியா மாறு வேடத்தில் வந்தார். மாறுவேடத்தில் சென்று மருத்துவமனையின் நிலைமையை ஆய்வு செய்ய அவர்  முடிவு செய்தார். ஆனால் அவர் மாறுவேடத்தில் இருந்ததால் பாதுகாவலர்கள் அவரை அடையாளம் தெரியவில்லை அதனால் அவரை தடுத்து நிறுத்தினார் 
 
இதனை அடுத்து தான் மத்திய அமைச்சர் என்று கூறிய பின்னரே அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு மத்திய மந்திரியை அனுமதித்தார் என்று தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் மாண்ட்வியா தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளதை அடுத்து இந்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்