உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் விசாரணைகள்

திங்கள், 7 செப்டம்பர் 2015 (12:50 IST)
உச்ச நீதிமன்றத்தில் நிலக்கரி சுரங்க முறைகேடு, புனே திரைப்பட கல்லூரி வழக்கு போன்ற முக்கிய வழக்குகளில் இன்று விசாரணை நடைபெறுகிறது.


 


இன்று நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகளில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீது தமிழ்நாடு முதல் அமைச்சர் தொடர்ந்த 3 அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.   

புனே திரைப்படக் கல்லூரி முதல்வராக பாஜக வை சேர்ந்தவரும், பிரபல டி.வி. நடிகருமான கஜேந்திர சவுகானை மத்திய அரசு நியமித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இது தொடர்பான வழக்கு விசாரணையும் , நிலக்கரி சுரங்க முறைகேட்டு வழக்கில் சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மீதும் விசாரணை நடைபெற உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்