அமைச்சர் ஆனதால் தலைமை செயலகத்தில் ரோஜா நடத்திய சிறப்பு பூஜை!

புதன், 13 ஏப்ரல் 2022 (18:48 IST)
நடிகை ரோஜா சமீபத்தில் அமைச்சர் ஆனதை அடுத்து தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அலுவலக அறையில் சிறப்பு பூஜை நடத்தியுள்ளார்
 
நகரி தொகுதி எம்எல்ஏவான நடிகை ரோஜா ஆந்திர மாநிலத்தின் இளைஞர் நலத் துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக சமீபத்தில் பதவியேற்றார் 
 
இதனை அடுத்து அவர் இன்று அமைச்சர் அலுவலகத்தில் பணிபுரிய தொடங்கினார் 
 
முன்னதாக தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அமைச்சரின் அலுவலகத்தில் சிறப்பு பூஜை நடத்தினார். இந்த பூஜையில் ரோஜா கணவர் செல்வமணி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்