சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை தண்டனை.. பட்டாசு வெடித்து கொண்டாடிய நடிகை..!

திங்கள், 11 செப்டம்பர் 2023 (09:27 IST)
ஆந்திர மாநிலம் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து நடிகையும் ஆந்திரா மாநில அமைச்சருமான ரோஜா பட்டாசு வெடித்து கொண்டாடியதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
சமீபத்தில் முன்னாள் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர் படுத்திய நிலையில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் ஆந்திர மாநில விளையாட்டு துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா, சந்திரபாபு நாயுடு சிறை தண்டனை என்பது கேள்விப்பட்டவுடன் பட்டாசு வெடித்து கொண்டாடினார். மேலும் அவரது கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கினர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்