மகள் காணாமல் போனதாக புகார்! அடைத்து வைத்து தந்தையே வன்கொடுமை செய்தது அம்பலம்!

Prasanth Karthick

வெள்ளி, 4 அக்டோபர் 2024 (09:06 IST)

மும்பையில் மகளை தந்தையே பல ஆண்டுகளாக வன்கொடுமை செய்து வந்த நிலையில் மகளை காணவில்லை என புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

மும்பையின் மகாலஷ்மி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. சமீபத்தில் இவர் காணாமல் போன நிலையில், சிறுமியின் தந்தை மகளை காணவில்லை என டார்டியோ காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபரை கைது செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

 

இந்நிலையில் காணாமல் போன சிறுமியை குற்றப்பிரிவு போலீஸார் கண்டுபிடித்து காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர். அங்கு சிறுமியிடம் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. சிறுமியை 12 வயது முதலே அவரது தந்தை வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
 

ALSO READ: ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்.. திண்டுக்கல்லில் பரபரப்பு..!
 

5 ஆண்டுகளுக்கும் மேலாக தனது தந்தையாலேயே வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி ஒருக்கட்டத்தில் அவரிடமிருந்து தப்பி வீட்டை விட்டு ஓடியுள்ளார். இதுகுறித்து சிறுமி அளித்த தகவல்களின் அடிப்படையில் சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்