புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை

வியாழன், 20 மே 2021 (10:31 IST)
புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று ஆலோசனை. 

 
நாடு முழுவதும் ஒரே மாதிரியாக மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்த மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த உள்ளது. இதற்கான நடவடிக்கைகள், திட்டங்கள் முன்னதாக வெளியிடப்பட்டது. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழி கொள்கை உள்ளிட்ட சில திட்டங்களுக்கு தமிழகத்தில் தொடர் எதிர்ப்பு எழுந்து வருகிறது.
 
இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் மாநில கல்வி துறை செயலாளர்களுடன் புதிய கல்வி கொள்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அதை புறக்கணிப்பதாக தமிழக அரசு தெரிவித்தது. இதனிடையே, புதிய தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது குறித்து ஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவன முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்