புதிய அரசின் முதல் ரெயில்வே பட்ஜெட்டில் மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரெயில் திட்டம் இடம் பெற்றுள்ளது. ரெயில்வே அமைச்சர் சதானந்த கவுடா, இதனை ஜூலை 8ஆம் தேதி, மக்களவையில் அறிவித்தார்.
புல்லட் ரெயில்கள் மூலம் வைர நாற்கரத் தடத்தினை உருவாக்கும் நரேந்திர மோடியின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தில்லி, மும்பை, சென்னை, கொல்க்ததா இடையே புல்லட் ரெயில் அறிமுகம் ஆக உள்ளது.