இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த மாநிலம் இதுதான்: ராகுல் காந்தி

செவ்வாய், 11 அக்டோபர் 2022 (13:55 IST)
இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசு கர்நாடக மாநில அரசு தான் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 
 
கன்னியாகுமரி தொடங்கிய இந்திய ஒற்றுமை பயணம் தற்போது கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஒற்றுமை பயணத்தின் இடையே அவர் செய்தியாளர்களை சந்தித்தார் 
 
அப்போது இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசாக கர்நாடக அரசு உள்ளது என்றும் ஒவ்வொரு வேலைக்கும் 40 சதவீதம் கமிஷன் வாங்குகிறார்கள் என்றும் பாஜக எம்எல்ஏக்களே இது ஊழல் மிகுந்த அரசு என்று கூறுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்
 
இந்த நடைபயணம் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பரப்பும் வெறுப்பு வன்முறை ஆகியவற்றுக்கு எதிரானது என்றும் இந்தியா பிளவு படாது என்றும் இந்தியா ஒன்றுபட்டு இருக்கும் என்பதே இந்த பயணத்தின் மூலம் சொல்லும் செய்தி என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்