டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரான ராகுல், தனக்கு ஓய்வு வேண்டும் என்று கட்சித்தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார். சோனியா காந்தி ராகுலின் ஓய்வுக்கு ஒப்புதல் அளித்தார்.
அதன்படி கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராகுல் ஓய்வெடுக்க சென்றார். அவர் எங்கு சென்றார் என்பது ரகசியமாக இருந்த நிலையில், ராகுல் நாட்டில் இல்லாதது குறித்து பலரும் கிண்டல் செய்து வந்தனர். நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிராக நாட்டில் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அவர் ஓய்வு எடுக்க சென்றது தவறு என காங்கிரஸ் கட்சியினரே அதிருப்தி தெரிவித்தனர்.