தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி

சனி, 25 மே 2019 (13:06 IST)
மக்களவை தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் தோல்வியடைந்ததை தொடர்ந்து கட்சியில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல்காந்தி.

நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் 542 தொகுதிகளில் காங்கிரஸ் வெறும் 52 தொகுதிகளை மட்டுமே பெற்றது. இந்நிலையில் இன்று காங்கிரஸின் காரிய கமிட்டி கூடியது. இந்த கூட்டத்தில் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதை சற்றும் எதிர்பாராத காரிய கமிட்டியினர் ராகுல் ராஜினாமா செய்யக்கூடாது என்றும், தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதோடு அவரது ராஜினாமாவை நிராகரித்துள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்