மக்களவையில் ‘பறக்கும் முத்தம்’ கொடுத்த ராகுல் காந்தி: சபாநாயகரிடம் பாஜக பெண் எம்.பி.க்கள் புகார்

புதன், 9 ஆகஸ்ட் 2023 (17:20 IST)
மக்களவையில் ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததாக பாஜக பெண் எம்பிக்கள் புகார் அளித்துள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது மக்களவை கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது ஆவேசமாக பேசினார்.  
 
இதனை அடுத்து  அமைச்சர் ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தி மீது கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். அப்போது பறக்கும் முத்தம் கொடுத்தபடியே ராகுல் காந்தி அவையை விட்டு வெளியேறினார். 
 
இதனை அடுத்து பாஜக பெண் எம்பிக்கள் சபாநாயகர் இடம் ராகுல் காந்தி தங்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளனர்.  இந்த நடவடிக்கை பெண் எம்பிக்களை மட்டும் இன்றி நாடாளுமன்றத்தின் கண்ணியத்திற்கு எதிரானது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்