கூச்சப்படாம சாப்பிடுங்க.. கொஞ்சம் மட்டன் வைக்கவா? – ஒலிம்பிக் வீரர்களுக்கு உணவு சமைத்த முதலமைச்சர்!

வியாழன், 9 செப்டம்பர் 2021 (09:16 IST)
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பஞ்சாப் முதல்வர் தன் கையால் உணவு சமைத்து பரிமாறிய வீடியோ வைரலாகியுள்ளது.

நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 7 விருதுகளை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தனர்.

இந்நிலையில் இந்தியா சார்பாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற பஞ்சாப் வீரர்கள் மற்றும் ஹரியானா வீரர் நீரஜ் சோப்ரா உள்ளிட்டோருக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் விருந்து வைத்தார். தனது பண்ணை வீட்டில் விருந்தளித்த முதல்வர் தானே சிக்கன், மட்டன் என அனைத்தையும் சமைத்து தனது கையாலேயே வீரர்களுக்கு பரிமாறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amarinder Singh (@capt_amarindersingh)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்