வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? பிரியங்கா காந்தி போட்டியா?

வெள்ளி, 9 ஜூன் 2023 (10:54 IST)
பிரதமர் மோடி குறித்து அவதூராக பேசியதாக ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவருடைய எம்பி பதவி பறிபோனது. இதனை அடுத்து வயநாடு தொகுதி தற்போது காலியான தொகுதி ஆக உள்ளது. 
 
இந்த தொகுதிக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் பிரியங்கா காந்தி தான் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஏற்கனவே இந்த தொகுதியில் ராகுல் காந்தி மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது தெரிந்ததே. வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றால் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுக்கு வரும் 2024 தேர்தலில் ஒரு உற்சாகத்தை கொடுக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் வயநாடு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்படுமா? அதில் பிரியங்கா காந்தி போட்டியிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்