ஹிந்தி பேசப்படும் பீகார் மற்றும் உத்திரபிரதேசம் மாநிலங்களில் மூன்று மொழி இல்லாமல் ஹிந்தி மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டது. இதன் காரணமாக, ஹிந்தி மட்டும் படித்து விட்டு வெளியே வந்த மாணவர்கள், போட்டி தேர்வுகளில் ஆங்கிலம் தெரியாமல் முழித்தனர். மேலும், ஹிந்தி அதிகாரி பதவியில் நியமிக்கப்பட்டவர்கள், ஆங்கிலத்தை மொழி பெயர்க்க தெரியாமல் சிரமப்பட்டனர். இதனால் அவர்கள் அந்த வேலைக்கு பொருத்தமில்லாதவர்களாக இருந்தனர். அதேபோல், பத்திரிக்கை துறைகளில் பணிபுரிந்தவர்களும், ஆங்கிலம் தெரியாததால், வேலைக்கு பொருத்தமில்லாதவர்களாக கருதப்பட்டனர்.