நாடு முழுவதும் மின்வெட்டு அபாயம்: ராகுல் காந்தி எச்சரிக்கை!

புதன், 20 ஏப்ரல் 2022 (17:07 IST)
நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி எச்சரிக்கை செய்துள்ளார்
 
இது குறித்து அவர் மேலும் கூறியது ’8 ஆண்டுகளாக பேசிய பேச்சுக்களின் விளைவாக இந்தியாவில் எட்டு நாட்கள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளது இதனால் மின்வெட்டு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது 
 
மின்வெட்டு ஏற்பட்டால் சிறுதொழில்கள் நசுங்கும் நிலைக்கு தள்ளப்படும். இது மேலும் வேலை இழப்பிற்கு வழிவகுக்கும். எனவே வெறுப்புணர்வை பரப்புவதை நிறுத்திவிட்டு மின் உற்பத்தி நிலையங்களை திறக்க வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார் 
 
இந்நிலையில் கோடை காலத்தின் தேவை அதிகரித்துள்ள நிலையில் காற்றாலை சீசன் தொடங்க இருப்பதாகவும் அதன் மூலம் தினமும் 1,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது என்றும் இதன் காரணமாக மின் தேவையை பூர்த்தி செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்