ஹைதராபாத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் இருபாலரும் படித்து வருகின்றனர். சம்பவத்தன்று மாணவிகள் கழிவறைக்குள் சென்று, 10ஆம் வகுப்பு மாணவர்கள் சிறுமிகளை செல்போனில் ஆபாச படம் எடுத்து அதனை மற்ற மாணவர்களுக்கு அனுப்பி ரசித்துள்ளனர்.
மேலும் அந்த சிறுமிகளிடம் ஆபாசப் படத்தை காட்டியுள்ளனர். அதோடு மட்டுமல்லாமல், தங்களை கட்டிப்பிடிக்கும் படியும், முத்தம் கொடுக்கும் படியும் தொந்தரவு செய்துள்ளனர். இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் கொடுத்துள்ளனர். ஆனாலும் பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த தகவல் பரவியதும் நேற்று ஏராளமான பெற்றோர்கள் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.