இந்நிலையில், இந்த போராட்டத்தில் பங்கேற்ற அரியானாவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷன் கிரோவால் என்பவர், இன்று தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலத்தைக் காண பல்வேறு அரசியல் தலைவர்களும் வந்த வண்ணம் உள்ளனர்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ராம் கிஷன் உடலைக் காணவும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காகவும், ராம் கிஷன் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வந்தார். ஆனால், அவரை உள்ளே விட மறுத்த போலீசார், அவரை கைது செய்தனர். கலவரம் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்த கைது நடைபெற்றது என்று போலீசார் கூறியுள்ளனர்.