ஆட்டோ ஓட்டுநர் வேடத்தில் சுற்றித்திரிந்த தீவிரவாதி கைது

செவ்வாய், 7 ஜூன் 2022 (16:54 IST)
ஆட்டோ ஓட்டுநர் வேடத்தில் சுற்றித்திரிந்த தீவிரவாதி ஒருவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தீவிரவாதிகள் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்து வருவதாகவும் தக்க சமயத்தில் தீவிரவாத செயலில் ஈடுபட்டு வருவதாகவும் உளவுத்துறைக்கு அவ்வப்போது தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
இந்த நிலையில் பெங்களூரில் ஆட்டோ ஓட்டுனர் வேடத்தில் தீவிரவாதி ஒருவர் சுற்றி திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்ததையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார்
 
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கர்நாடக மாநிலத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் ஹூசைன் என்றும் தெரியவந்து உள்ளது. இதனை அடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்