வடக்கு அஸ்ஸாமின் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள ராமபரா பகுதியில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் வசித்து வரும் நானு மிர்தா என்பவர், அதே பகுதியில் வசிக்கும் சானந்தன் பான் என்ற 5 வயது சிறுவனை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்பு, அவர் சிறுவனின் தலையைத் துண்டித்து கொலை செய்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர்களும், சிறுவனின் உறவினர்களும் நானு மித்ராவை வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து அடித்துக் கொன்றுள்ளனர்.
நானு மித்ராவின் வீட்டில் சாமி சிலைகள், பூஜைக்குரிய பொருட்கள் இருப்பதாலும், சிறுவனின் பிரேதத்திற்கு அருகில் சில மந்திர பொருட்களும், சிலைகளும் இருந்ததாலும் அவர் அந்த சிறுவனை நரபலி கொடுத்திருக்கக்கூடும் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.