பஹல்காம் தாக்குதல்.. 2 மாதங்களுக்கு பின் இருவரை கைது செய்த NIA.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

Mahendran

ஞாயிறு, 22 ஜூன் 2025 (13:07 IST)
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 உயிர்களை பலிகொண்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதல் நடந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பிறகு, NIA முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்துக்குக் காரணமான மூன்று நபர்கள் பாகிஸ்தான் நாட்டவர்கள் என்றும், அவர்கள் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.
 
இந்த வழக்கின் விசாரணையை நடத்திவரும் NIA, தாக்குதலுக்கு முன்பு பயங்கரவாதிகளுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் பிற உதவிகளை வழங்கியதாக கூறப்படும் பஹல்காம் பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
 
பட்கோட்டை சேர்ந்த பர்வேஸ் அகமது ஜோதர் மற்றும் ஹில் பார்க், பஹல்காம் பகுதியை சேர்ந்த பஷீர் அகமது ஜோதர் ஆகிய இருவரும், தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பு ஹில் பார்க்கில் உள்ள ஒரு குடிசையில் பயங்கரவாதிகளை தெரிந்தே மறைத்து வைத்துள்ளனர். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்  கீழ் தற்போது கைது செய்யப்பட்டுள்ள இந்த இருவரும், மூன்று பயங்கரவாதிகளும் பாகிஸ்தான் நாட்டவர்கள் என்றும், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் NIAவிடம் தெரிவித்துள்ளனர்.
 
இவர்கள் இருவரும் தங்க வைத்த பயங்கரவாதிகள் தான் அதே நாள் பிற்பகலில், மத அடையாளத்தின் அடிப்படையில் சுற்றுலா பயணிகளைத் தேர்ந்தெடுத்து கொன்றனர்," என்று NIA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்