இட ஒதுக்கீடு கேட்டு நாங்கள் நடத்தும் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு உள்ளது. இதனால் இந்த போராட்டம் நிச்சயம் வெல்லும். இந்த போராட்டம் மாரத்தான் ஓட்டம் போன்றதால், இது முடிவடைய சுமார் 2 ஆண்டுகள் வரை கூட ஆகலாம்.
இதற்காக, பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த 27 கோடி பேரை ஒருங்கிணைத்து வருகின்றோம். மேலும், இந்த போராட்டத்தை இந்தியா முழுமைக்கும் விரிவுபடுத்த உள்ளோம்.
ஜாதிவாரி இடஒதுக்கீடு அளிப்பதால், இந்தியா 60 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது. இதுவே, இந்தியா வல்லரசாவும் தடையாக உள்ளது.
இந்தியாவில் உள்ள மொத்தம் 182 ஜாதிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அவற்றில் 4 அல்லது 5 ஜாதிகள் மட்டுமே குஜராத்தில் உள்ளன. மீதி, அனைத்து சமூகத்தைச் சேர்ந்த ஏழைகளுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார்.