நேற்று கடைசி ஞாயிறு என்பதால், அங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மேலும், தெலுங்கு தேச கட்சி மாநாட்டிற்கு வந்த கட்சி தொண்டர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் நேற்று அங்கு குவிந்ததால் கூட்டம் நிரம்பியது.
நேற்று ஒரு நாள் மட்டும், ஒரு லட்சம் பேர் வரை ஏழுமலையானை தரிசனம் செய்தனர். மேலும் 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர்.