மம்தாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை - இடதுசாரிகள்

சனி, 30 ஆகஸ்ட் 2014 (15:52 IST)
திரிணாமூல் காங்கிரசுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என இடதுசாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாஜக-வை எதிர்க்க திரிணாமூல் காங்கிரசுடன் கூட்டணி சேருவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் குருதாஸ் குப்தா தெரிவித்துள்ளார்.
 
அண்மையில் திரிணாமூல் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, அரசியலில் கம்யூனிஸ்ட்கள் உட்பட யாரும் தீண்டத்தகாதவர்கள் இல்லை என பதில் அளித்திருந்தார்.
 
இதுகுறித்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா, திரிணாமூல் காங்கிரசுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை, மம்தாவின் கொள்கை மற்றும் அரசியலால் தான் மேற்கு வங்கத்தில் பாஜக நுழைந்தது. பாஜகவை எதிர்க்கவெண்டுமென்றால் அதனை நாங்களே செய்வோம் எனக் குறிப்பிட்டார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்