ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் பெகுனியாபடா என்ற இடத்தில் கடந்த ஞாயிற்று கிழமை விநாயகர் சிலைகளை நீரில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, அடையாளம் தெரியாத சிலர் திராவகத்தை அங்கிருந்தவர்கள் மீது வீசியுள்ளனர். இதில் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விசாரணையில், இந்த நிகழ்ச்சியின் போது யார் நடனம் ஆடுவது என்பது குறித்து சண்டை எழுந்ததாகவும், அதுவே இச்சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என காவல்துறை கருதுகிறது.