திருமணமான புதுப்பெண் உறவினரால் கதற கதற கற்பழிப்பு

திங்கள், 25 மே 2015 (14:23 IST)
மகாராஷ்டிராவில் ஒரு திருமணமான இளம்பெண்ணை அவரது உறவினரே  கதற கதற கற்பழித்துள்ளார்.
 
தானேவில் உள்ள  பகுதியில் அந்த இளம் பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் அப்பெண் ஒரு  திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக தனது கணவர், தனது மாமா ஆகியோருடன் அருகில் இருந்த ஒரு கிராமத்திற்கு சென்றுள்ளனர்.
 
இதில் நிச்சயதார்த்த  விழா இனிதே முடிந்ததால் வந்திருந்த அனைவரும் தங்கள் இல்லத்திற்கு செல்ல புறப்பட்டனர். இந்நிலையில் இவரது உறவினரான மாமா உனது கணவர் ஏற்கனவே வீட்டிற்கு புறப்பட்டுவிட்டதாக கூறியுள்ளார். உடனே வீட்டிற்கு தனியாகச் சென்ற அந்த புதுப்பெண்ணை ஒரு அடர்ந்த காட்டு பகுதிக்கு தூக்கிச்சென்று கதற கதற கற்பழித்துள்ளார்.
 
இதுகுறித்து காவல்துறையினருக்கு  புகார் தெரிவிக்கப்பட்டதில், சம்மந்தபட்ட நபரை  கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்