தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்தில் சில குறைபாடுகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் காப்பீடு ப்ரீமியத்துக்கான சுமை குறைக்கப்படும். மேலும், காப்பீடு செய்யப்பட்ட தொகை முழுமையாகவும், விரைவாகவும் கிடைக்கும்.